Thursday, 15 September 2011

கனவு

அவள் எனது கனவுகளை
நினைத்து சிரிக்கிறாள்,
நானோ, அவள் சிரிப்பையே
கனவாக காண்கிறேன்

 

காதல்

ஒரு பெண்ணை சந்திக்கும் போதே
வருவது அல்ல காதல்,
அவளை பற்றி சிந்திக்கும்
போது தான்
வருகிறது

Sunday, 11 September 2011

இசை

இன்று இசை கல்லூரி விடுமுறையாம் 
அவளின் கால் கொலுசு தொலைந்ததற்காக 

Saturday, 10 September 2011

என் முதல் பகிர்வு

சிறிது நாட்களாகவே எனது blog ஐ ஆரம்பித்து என் எண்ணங்களை பகிர்ந்திட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.  அதற்கான தருணம்  தற்போது தான் வந்துள்ளதாக நினைக்கிறேன். 

என்னிடமிருந்து மாதத்திற்கு ஒரு கவிதையாவது எதிர்பார்க்கலாம்,
உங்களது ஆதரவை என்றும் எதிர்பார்க்கும்


பாலாஜி 

எப்பொழுதும் நீ

வெறுக்கிறேன்
வெறுப்பதை மறைக்கிறேன்
மறைக்கிறேன்
மறைப்பதை மறுக்கிறேன்
மறுக்கிறேன்
மறுத்ததை மறக்கிறேன்
மறக்கிறேன்
வெறுத்ததையே மறக்கிறேன்




நினைவுகள்


அவள் வந்த அந்த தினம்
மனம் முழுவதும் மணம்
என்னை பார்த்தாள் ஒரு கனம்
ஆனது உடனே மனம் கணம்
அப்பார்வைக்கு ஈடில்லை பணம்
என்றும் ஆறாது மனதின் ரணம்
அவளை விரும்ப வைத்தது குணம் - பின்
தயங்க வைத்தது அவள் சினம்
அவள் இல்லையெனில்
வாழ்கையோ ஒரு வனம்
நானோ ஒரு பிணம்